தமிழ் இலக்கியத் துறையில் தலையாய தொண்டாற்றியவர் என்று சுதந்திரப் போராட்ட நூற்றாண்டு விழாவின்போது அன்றைய சென்னை அரசு மு. வரதராசனாரை பாராட்டி நடராஜர் உருவம் பொறித்த கேடயம் (15.8.1957) வழங்கிச் சிறப்பித்தது.
தமிழுக்கு இத்தகைய பெரும் தொண்டு செய்த மு.வ. 10.10.1974 ஆண்டு சென்னையில் மறைந்தார். கலைகளுள் எழுத்துக்கலைக்கு தனி ஆற்றல் உண்டு. மு.வ.வின் எழுத்து காலம் கடந்து வாழும்.
டாக்டர் மு.வ. மாணவர் சமுதாயத்திற்கு கல்வியின் சிறப்பை எடுத்துரைத்த அழகிய அரிய கருத்துக்களை இங்கே பதிவு செய்திருக்கிறோம். மாணவர்களுக்கு வழிகாட்டிச் சென்ற டாக்டர் மு.வ. அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுளேன்.